search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டசபை தேர்தல்"

    • பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டினர்

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி 86 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 40 சதவீத கமிஷன் விவகாரம், எம்.எல்.ஏ.க்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற வைத்தது உள்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி கர்நாடக பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

    அப்போது அந்த மூத்த நிர்வாகி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கான காரணம் பற்றி பிரதமரிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

    அதாவது, தேர்தலில் டிக்கெட் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. மாநிலத்தில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை முறையாக வழிநடத்தவில்லை. அவர்களை புறக்கணித்துள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் உற்சாகமாக ஈடுபடவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.

    அதுபோல் கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டினர். இதனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, பா.ஜனதா தலைவர்கள் சரியான பதிலடி கொடுக்காததும் தோல்விக்கு மற்றொரு காரணம்.

    மேலும் நீங்கள் மட்டும் பிரசாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் பா.ஜனதா 35 இடங்களை கூட பெற்றிருக்காது என்றும் அந்த மூத்த நிர்வாகி, பிரதமர் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், கர்நாடகத்தில் அதிக இடங்களை கைப்பற்ற பிரதமர் மோடி தற்போதே திட்டமிட்டு வருவதாகவும், இதனால் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
    • தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

    மும்பை :

    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரசாரம் செய்த பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவை தான் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு காரணம்.

    இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தோல்வி. கர்நாடகத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 பாராளுமன்ற தேர்தலிலும் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது.

    நாக்பூர் :

    கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளின் போக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.

    கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றி பெற உதவி உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இது ஒரு முயற்சி மட்டுமே. கர்நாடகத்தில் பா.ஜனதா முன்வைத்த 'மோடி ஹை தோ மம்கின் ஹை' (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்) என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரு தனி நபர் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருப்பதை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை.
    • பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. இந்தநிலையில் மைசூரு மாட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் மகாராணி கல்லூரிக்கு முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. கட்சி பொய்யான வாக்குறுதிகள், ஊழல், 40 சதவீதம் கமிஷன், லஞ்சம், ஆகியவற்றால் தோல்வி அடைந்து உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் கர்நாடகத்தில் நடத்திய 'ரோடு ஷோ'வால் எந்த பலனும் இல்லை. அதனால்தான் பா.ஜனதா கட்சி தொகுதிகள் குறைந்துள்ளது. மேலும் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்த ஊழல் வழக்குகள், மதக் கலவரம், வன்முறை போன்றவைகளால் மாநில மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதனால்தான் இந்த தடவை பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    கர்நாடக மக்களுக்கு நல்லா தெரியும் இங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா யாரு வந்து வாக்கு கேட்டாலும் வெற்றி பெற முடியாது. இதனை நாங்கள் முன்பே கூறியுள்ளோம். நாங்கள் 130-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நானும்(சித்தராமையா) டி.கே. சிவக்குமாரும் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதைபோல் வெற்றி பெற்று உள்ளோம். வருணா தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு மக்களுக்கும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும்

    காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் மைசூரு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    • தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
    • 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார்.
    • கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    அவற்றில் முக்கியமான 5 திட்டங்களில், பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த இலவச திட்டங்கள் காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுத்தது என்றால், அது மிகையாகாது. இந்த இலவச திட்டங்கள் காங்கிரசின் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி, அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்கள். ஆனாலும் வீடு, வீடாக உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கியதுடன், மந்திரிசபையின் முதல் கூட்டத்திலேயே இலவச திட்டங்களுக்கு அனுமதி வழங்குவோம் என தலைவர்கள் கூறினார்கள். பா.ஜனதாவும் அரை லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆண்டுக்கு 5 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், அந்த கட்சி அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்றுமா?, அது சாத்தியமாகுமா?, இதற்காக ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய் தேவை? என்பதை பற்றி பார்க்கலாம்.

    அதாவது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரத்து 800 கோடி தேவை ஆகும். அதுபோல், பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்) கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் கோடி தேவையாகும். ஏனெனில் மாநிலம் முழுவதும் 1.28 கோடி பெண்கள் பி.பி.எல். கார்டு வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி தேவை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும் என கருதப்படுகிறது. இதுதவிர வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கவும், 10 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காகவும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் அளித்துள்ள முக்கியமான இந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி தேவையாகும். கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை ரூ.3 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்திந்தார். அதே நேரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.

    இதன்மூலம் கர்நாடக அரசுக்கான கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் ஏற்படும். இதனால் தான் காங்கிரசால் இலவச திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?, அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை பொருளாதார நிபுணர்கள் எழுப்பி உள்ளனர். என்றாலும், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? அதற்காக தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

    • ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது.
    • பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்.

    புதுச்சேரி :

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

    புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.

    இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார்.
    • ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுரேஷ்குமாரும், காங்கிரஸ் சார்பில் புட்டண்ணாவும் களத்தில் இருந்தனர்.

    பா.ஜனதா கட்சியில் மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்த புட்டண்ணா, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டும், பா.ஜனதாவில் இருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தார். அவருக்கு காங்கிரஸ், ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார். அதன்பிறகு, சுரேஷ்குமாருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததால் இருவரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

    ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது. இறுதியில் ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான 7 ஆயிரத்து 914 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா 50 ஆயிரத்து 306 வாக்குகளும், சுரேஷ்குமார் 58 ஆயிரத்து 220 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
    • தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி உள்பட கட்சியின் அனைத்து தலைவா்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

    ஒரு தேசிய கட்சியாக நாங்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி முழு பலத்துடன் திரும்புவோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார்.
    • லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முக்கியமான 13 மந்திரிகள் மற்றும் சபாநாயகர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். அதாவது இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் (முத்தோல்), சட்டத்துறை மந்திரி மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி (பீலகி), நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), வீட்டு வசதி மந்திரி சோமண்ணா (சாம்ராஜ்நகர் மற்றும் வருணா), சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு (பல்லாரி புறநகர்), பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் (திப்தூர்), சர்க்கரை மந்திரி சங்கர் பட்டீல் (நவலகுந்து), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் (எலபுர்கா), வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் (கனகபுரா) என மொத்தம் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்துள்ளனர். இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகரில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார். அதுபோல் பா.ஜனதாவில் இருந்து விலகி அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.

    • தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.
    • கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

    மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்காள முதல்-மந்திரி):- 2024 பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இது பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம் ஆகும். பா.ஜ.க.வின் ஆணவத்துக்கும், சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கும் எதிராக மக்கள் வாக்கு அளித்துள்ளனர். நடக்க உள்ள சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வி அடையும். கர்நாடக மாநிலத்தில் மாற்றத்துக்கு ஆதரவாக மக்கள் அளித்துள்ள உறுதியான தீர்ப்புக்கு என் வணக்கங்கள். மிருகத்தனமான சர்வாதிகார, பெரும்பான்மை அரசியல் தோற்றுள்ளது. மக்கள் பன்முகத்தன்மையும், ஜனநாயக சக்திகளும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

    அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள். தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.

    மாணிக் சகா (பா.ஜ.க. மூத்த தலைவர், திரிபுரா முதல்-மந்திரி):- வெற்றியும், தோல்வியும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு அங்கம் ஆகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒரு கட்சி போய் மற்றொரு கட்சி மீண்டும் வரும்.

    அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவின் மூலம் அந்த மாநிலம் விடுத்துள்ள செய்தி, பா.ஜ.க.வின் எதிர்மறை, வெறுப்பு, வகுப்புவாத, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவான, பெண்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தை பிளவுபடுத்தும் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது, தனிமனிதனை மையமாகக் கொண்ட அரசியல் தொடங்கி உள்ளது என்பதாகும்.

    மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர்):- கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது. வகுப்புவாத அரசியலை பிற மாநிலங்களும் இனி நிராகரித்து விடும். வளர்ச்சிக்கும், வளத்துக்கும் மக்கள் வாக்கு அளிப்பார்கள். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி அல்லது பிற காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுற்றி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் அடுத்த அண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது.

    பூபேஷ் பாகல் (காங்கிரஸ் மூத்த தலைவர், சத்தீஷ்கார் முதல்-மந்திரி):- பா.ஜ.க. பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது, கர்நாடக மாநில மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கி உள்ளனர். பா.ஜ.க.வால் மக்கள் அலுத்து விட்டனர். இமாசலபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி, காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்கும். அவர்கள் நம்பிக்கையை வளர்க்கும். காங்கிரஸ் கட்சி எழுப்பிய பிரச்சினைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (வைகோ):- கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வின் மிக மோசமான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தியின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது. ராகுல்காந்தியின் அத்தியாயம் கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்):- 'ராகுல்காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்தியை போலவே, நீங்கள் (ராகுல்காந்தி) மக்களின் இதயங்களில் நுழைந்தீர்கள். அவரைப் போலவே மென்மையான வழியில் உலகின் சக்திகளை - அன்புடனும், பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். பிரிவினைவாதத்தை நிராகரிக்க கர்நாடக மக்கள் கோரிக்கை விடுத்தனர். கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்'.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்):- 'கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை பாராட்டுகிறேன். கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்):-'கர்நாடக தேர்தலில் பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வரம்புமீறி அவதூறு பரப்புரை செய்தனர். ஊழலை ஒழிக்க உறுதி ஏற்றவர்கள் 40 சதவீதம் கமிஷன் ஆட்சி என்ற அவப்பெயரில் மூழ்கி போனார்கள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வஞ்சக சூழ்ச்சிகளை வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்த கர்நாடக மக்கள் வகுப்புவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி படுதோல்வி அடைய செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்துகிறது'.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள போக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என அவை கூறின.

    • மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
    • எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட தோல்வி குறித்து குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே இறுதியானது. வெற்றி-தோல்வியை நான் சமமாக எடுத்து கொள்கிறேன். ஆனால் இந்த தோல்வி இறுதி அல்ல. எனது போராட்டம் இத்துடன் நின்றுவிடாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன்.

    எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் வெற்றி-தோல்வி புதிது அல்ல. இதற்கு முன்பு தேவகவுடா, எனது சகோதரர் ரேவண்ணா, நான் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளோம். வரும் நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்வோம்.

    கர்நாடகத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    • 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.
    • 19 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது, மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டோர் பா.ஜனதாவில் இருந்து விலகியது ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் குஜராத் மாதிரி கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த குஜராத் மாதிரி வேட்பாளர்கள் நிறுத்தியது பா.ஜனதாவில் எடுபடாமல் தோல்வி அடைந்திருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

    அவர்களில் 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். 19 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 35 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×